வெறிச்சோடின  சென்னையின் முக்கிய பகுதிகள் (வீடியோ)

Nov 3, 2017, 4:13 PM IST



தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால்  சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.   மேலும் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். 

மேலும் இன்றும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததால், சென்னையில் முக்கிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனால் எப்போதும் மிகவும் கூட்ட நெரிசலோடு காணப்படும் தி.நகர் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதே போல் குறிப்பிட்ட ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டு நார்வே வானிலை மையம் கணித்தது நடந்தது போல், இப்போதும் சென்னையில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.