CRPF பயிற்சியில் நடந்த விபரீதம்... வீட்டிற்குள் பாய்ந்த துப்பாக்கி குண்டு... அடுத்து நடந்தது என்ன?

By Narendran SFirst Published Apr 29, 2022, 5:00 PM IST
Highlights

சென்னையில் சி.ஆர்.பி.எஃப் பயிற்சி தளத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது ஒருவர் துப்பாக்கியால் சுட்ட குண்டு அருகே உள்ள வீட்டிற்குள் பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் சி.ஆர்.பி.எஃப் பயிற்சி தளத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது ஒருவர் துப்பாக்கியால் சுட்ட குண்டு அருகே உள்ள வீட்டிற்குள் பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியில் சி.ஆர்.பி.எப் பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு சி.ஆர்.பி.எப் படைப்பிரிவில் உள்ள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வீரர்கள் பயிற்சி பெற்று பல இடங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சி.ஆர்.பி.எஃப் பயிற்சி தளத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது ஒருவர் துப்பாக்கியால் சுட்ட குண்டு அருகே உள்ள வீட்டிற்குள் பாய்ந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆவடி டாங் பேக்டரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட துணை ராணுவ பயிற்ச்சி முகாமில் காலை 11 மணியளவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது. அந்த பயிற்சியின் போது ஒரு வீரரின் குறி தவறி அருகாமையில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரையை துளைத்து உள்ளே சென்றது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தற்போது முத்தால்பேட்டை காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது, வீரர்களின் இலக்குகளுக்கு பின்னல் மணல் மூட்டை, அல்லது மணல் மேடுகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இதன் மூலம் துப்பாக்கி குண்டுகள் பயிற்சி தளத்தில் இருந்து வெளியே செல்லாதவாறு முழுமையாக பாதுகாக்கப்படும். இருந்த போதும், தற்போது துப்பாக்கி குண்டு எவ்வாறு குடியிருப்பு பகுதில் உள்ள வீட்டின் மேற்கூரையில் விழுந்துள்ளது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவடியில் அனைத்து பாதுகாப்பு துறை சம்பந்தமான அனைத்து தளங்களும் இங்கு உள்ளதால் இது பாதுகாக்கப்பட்ட பகுதியாக கருதப்படுகிறது. அதேபோல் இங்கு மிகுந்த பாதுகாப்புடன் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். இருந்த போதிலும் தற்போது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!