
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில், 'வி த லீடர்ஸ்' (We The Leaders Movement) இயக்கம் சார்பில் "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு" விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை, மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் அதைத் தடுக்கத் தவறிய அரசு நிர்வாகம் குறித்துக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.