செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபர்... இணங்க மறுத்ததால் இளம் பெண் மீது ஆசிட் ஊற்றி தீ வைத்து எரித்த கொடூரம்!

First Published Feb 19, 2018, 2:17 PM IST
Highlights
A young woman who has been sexually harassed


சென்னை மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் தனியார் ரத்த பரிசோதணை நிலையத்தில் வைத்துள்ளார் ராஜா, அங்கு பணியாற்றும் இளம் பெண் யமுனா மீது ஆசிட் ஊற்றி தீ வைப்பு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ராஜா என்பதாகும். இவர் மடிப்பாக்கத்தில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். இவர் தனது ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை செய்து வந்த ஊழியர் யமுனாவிற்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தாராம். ராஜாவின் செயல்பாடுகளை யமுனா எதிர்த்துள்ளார்.

இந்நிலையில், யமுனா தனது ஆசைக்கு ஏற்ற மாதிரி நடந்து கொல்லாத கோபத்தில் இருந்த ராஜா இன்று ஆசிட் ஊற்றி தீ வைத்துவிட்டு, தப்பி ஓடியுள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ரத்த பரிசோதனை நிலையத்தின் உரிமையாளர் ராஜாவை கைது செய்துள்ளனர்.

ஆசிட் வீச்சின் காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஆபத்தான நிலையில் இருக்கும் யமுனாவிற்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் விநோதினி, சென்னை வித்யா என ஓரு தலைக்காதலால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி உயிரிழந்த பின்னர் ஆசிட் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் பெண் ஒருவர் ஆசிட் வீசி ய்யேரிக்கபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!