வேகம் காட்டும் கொரோனா.! 35 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு -கட்டுப்பாடுகள் அதிகரிக்க திட்டமிடும் மத்திய அரசு

Published : Apr 10, 2023, 10:01 AM ISTUpdated : Apr 10, 2023, 10:09 AM IST
வேகம் காட்டும் கொரோனா.! 35 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு -கட்டுப்பாடுகள் அதிகரிக்க திட்டமிடும் மத்திய அரசு

சுருக்கம்

கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், தற்போது 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.  

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் கொரோனா பிடியில் சிக்கிய மக்கள் தற்போது தான் மீண்டு வருகின்றனர். இந்தநிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதம் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது 35 ஆயிரத்தை கடந்துள்ளது. தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் சரசர வென உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் நேற்று முன் தினம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32ஆயிரத்து 814 இருந்த நிலையில், இன்று காலை 35,199 ஆக உயர்ந்துள்ளது.  

தமிழக ஆளுநருக்கு எதிராக இறங்கி அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம்.?

கட்டுப்பாடுகள் அதிகரிக்க திட்டம்

கேரளாவில் மட்டும் 12 ஆயிரத்து 433 பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 369 பேருக்கு பாதிப்பு நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 1900 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருவதாக கூறப்படுகிறது. இருந்தபோதும் பெரிய அளவில் உயிர் இழப்பு இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லையென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இன்று மற்றும் நாளை கொரோனா சிறப்பு ஒத்திகையானது மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதையும் படியுங்கள்

அண்ணாமலை என்ன ஆண்டவனே நினைத்தாலும் நடத்த முடியாது..! பாஜக மாநில தலைவருக்கு எதிராக சீறும் செல்லூர் ராஜூ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சக மாணவர்களால் அடித்து கொ**ல்லப்பட்ட +2 மாணவன்.. சமுதாயம் எங்கே போகிறது..? அன்புமணி அதிர்ச்சி
எல்லாரும் அதிமுககாரன் கிடையாது... கட்சியில் இருப்பேன்டானு சொல்றவன்தான் ரோஷமானவன்..! செங்கோட்டையன் மீது செல்லூர் ராஜூ ஆவேசம்..!