ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 2.43 லட்சம் பேர் சென்றுள்ளனர்.
சென்னை: ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 2.43 லட்சம் பேர் சென்றுள்ளனர்.
ஆயுதபூஜை விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாடும் மக்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை போக்குவரத்து கழகம் செய்துள்ளது. அதற்கான தமிழ்நாடு அரசின் சார்பில் 12 மற்றும் 13ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் தவிர்க்கவும், பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இருக்க கூடாது என்ற அடிப்படையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வழக்கமான வழித்தடத்தில் செல்லும் 4722 பேருந்துகளுடன் மேலும் 700 சிறப்பு பேருந்துகள் பொதுமக்களின் வசதிக்காக இயக்கப்பட்டன. அக்டோபர் 12ம் தேதி மட்டும் 1,44,855 பேரும், அடுத்த நாளான 13ம் தேதி 99,045 பேரும் பயணித்துள்ளனர்.
குறிப்பாக வட மாவட்டங்களுக்கு கூடுதலாக பயணிகள் இம்முறை சென்றுள்ளனர் என்றும் இதேபோன்று திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அதிகம் பேர் பயணித்தனர் என்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுமுறைக்கு பின்னர் இதே எண்ணிக்கையில் பயணிகள் வசதிக்காக பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.