ஐஜி பொன் மாணிக்கவேலின் கீழ் இனி பணியாற்ற முடியாது! டிஜிபி அலுவலகத்தில் 11 பேர் பரபரப்பு புகார்! வீடியோ

Dec 19, 2018, 6:43 PM IST

சென்னை டி.ஜீ.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.டி.எஸ்.பி. இளங்கோ, விசாரணை அதிகாரிகளை, சுதந்திரமாக விசாரணை நடத்த விடாமல் தன் விருப்பப்ப்டியே விசாரணை நடத்த வேண்டும் என்று  பொன்.மாணிக்கவேல் உத்தரவிடுகிறார் ஏன் கூறி பரபரப்பான புகார் அளித்துள்ளார். 

மேலும் தன் விருப்பப்படி மட்டுமே வழக்கு நடைபெற வேண்டும் என்றும், ஆதாரம் இல்லாத போது கூட கைது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். நெருக்கடி காரானமாக ஓராண்டு வரை மருத்துவ விடுப்பில் இருந்துள்ளோம், பொன்.மாணிக்கவேல் தலைமையில் எந்த சிலையையும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பொன்.மாணிக்கவேல் ஐ.ஜி.ஆக இருந்த போது, அவர் மீது புகார் கொடுக்க எங்களால் முடியவில்லை. அவரை சிறப்பு அதிகாரியாக நீதிமன்றம் நியமித்துள்ளதால் அவருக்கு கீழ் இனிமேலும் பணி புரிய முடியாது எனவே எங்களுக்கு வேறு ஏதாவது பணி ஒதுக்கும் படி டிஜிபி யிடம் கேட்டுக்கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார். 

பொன்மாணிக்கவேல் மீது நேற்று 13 பேர் புகார் அளித்திருந்த நிலையில் மேலும் 11 பேர் இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.