10 மாவட்ட மக்களே இன்று உஷார்… உஷார்…. பிச்சுக்கிட்டு பெய்ய போகும் மழை

By manimegalai aFirst Published Oct 16, 2021, 7:47 AM IST
Highlights

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வங்ககடல் மற்றும் வடக்கு ஆந்திர, தெற்கு ஒடிசா கடல் பகுதியில் நிலை கொண்டு உள்ளது.

அதன் எதிரொலியாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் பல நாட்களாக மழை கொட்டி வருகிறது. இந் நிலையில் இன்றும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நீலகிரி, தேனி,கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடியும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.

click me!