மகளுடன் தாய் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: விருதுநகரில் பரபரப்பு

By Velmurugan sFirst Published Feb 6, 2023, 10:21 AM IST
Highlights

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மகளை கழுத்தை அறுத்துவிட்டு தாயும், மற்றொரு மகளும் தற்கொலை செய்ய முயன்று காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். தனியார் மஞ்சள் ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜான்சிராணி (40). இவர்களுக்கு மோனிகா (13), ரித்திகா மேரி (9) என்ற இரு மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த ஜான்சி ராணி நேற்று மாலை வீட்டில் தனது மூத்த மகள் மோனிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

கழுத்தை அறுத்துவிட்டு மகளை வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு இளைய மகள் ரித்திகா மேரியோடு ஜான்சி ராணி தற்கொலைக்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக இளைய மகள் ரித்திகா மேரியோடு அல்லம்பட்டி அருகே ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் லேசான காயத்துடன் தாயும், மகளும் உயிர் தப்பினர்.

அப்பகுதியில் இருந்தவர்கள் தாயையும், மகளையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில் மூத்த மகளை கழுத்தை அறுத்து கொலை செய்ய திட்டமிட்டு வீட்டில் பூட்டி வைத்தது தெரியவந்தது. 

கிராம மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

இதனைத் தொடர்ந்து மோனிகாவையும் மீட்ட காவல் துறையினர் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மூவரும் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விருதுநகர் கிழக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!