திருப்பத்தூரில் ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு டெங்கு! ஒரு பெண் குழந்தை உயிரிழப்பு!

By Velmurugan sFirst Published Sep 28, 2023, 3:02 PM IST
Highlights

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண் குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் பேட்டை 3 வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரா(வயது 35). இவரது கணவன் மணிகன்டன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். சுமித்ராவுக்கு பிரித்திகா (15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி(5) என 4 பெண் குழந்தைகளும், புருஷோத்தமன் என்ற எட்டு மாத கைக்குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநதி, புருஷோத்தமன் ஆகிய குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கடந்த 23ம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில்  யோகலட்சுமி மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து தற்போது பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூரில் தடுப்பூசி போடப்பட்ட 3 மாத பச்சிளம் குழந்தை உயிரிழப்பு; பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகிய இரண்டு குழந்தைகளும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26ம் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் நேற்று இரவு அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் புருஷோத்தமன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆடியோ லாஞ்ச் இல்லேனா என்ன? ஆட்சியவே புடிச்சிட்டா . . . விஜய் ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்

திருப்பத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தை உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!