அதிர்ச்சி செய்தி.. சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு கூல் ட்ரிங்க்ஸ் குடித்த தாய், மகள் துடிதுடித்து உயிரிழப்பு

By vinoth kumarFirst Published Oct 13, 2021, 3:29 PM IST
Highlights

கற்பகவல்லி தனது மகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று சிக்கன்கிரேவி வாங்கி வந்து, வீட்டில் தயார் செய்து வைத்திருந்த உணவுடன் வைத்து சாப்பிட்டுள்ளனர்.

கோவில்பட்டியில்  சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி கற்பகவல்லி(34). இந்த தம்பதிக்கு சண்முகபாண்டி (8) என்ற மகனும், தர்ஷினி (7) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு கற்பகவல்லி தனது மகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று சிக்கன்கிரேவி வாங்கி வந்து, வீட்டில் தயார் செய்து வைத்திருந்த உணவுடன் வைத்து சாப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி.. கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுவர்கள் ரத்த வாந்தி.. ஐசியூவில் தீவிர சிகிச்சை.!

அப்போது, சாப்பிட்ட சிறிது நேரத்தில் வயிற்றெரிச்சல் ஏற்படவே அருகில் உள்ள கடையில் இருந்து 10 ரூபாய் மதிப்புள்ள குளிர்பானத்தினை வாங்கி குடித்துள்ளனர். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி.. கூல்டிரிங்ஸ் குடித்த சிறுமி.. உடல் நீல நிறமாக மாறி, மூக்கில் ரத்தம் கசிந்து உயிரிழப்பு?

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  கிரேவி, சாப்பிட்ட சாப்பாடு மற்றும் குளிர்பானம் பாட்டில் ஆகியவற்றை பறிமுதல் செய்து சோதனைக்கு அனுப்பி உள்ளனர். ஏற்கனவே சென்னை பெசன்ட் நகரில் தரணி(13) என்ற சிறுமி மளிகை கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறிது நேரத்தில் உடல் நீல நிறமாக மாறி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!