தொடர்ந்து 120 அடியில் மேட்டூர் அணை..! மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் விவசாயிகள்..!

By Manikandan S R SFirst Published Dec 10, 2019, 2:46 PM IST
Highlights


மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியிலேயே நீடித்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. மழையின் தீவிரம் அதிகமாகவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை கடந்த செப்டம்பர் மாதம் எட்டியது. அதன்பிறகு மூன்று முறை மேட்டூர் அணை நிரம்பியது.

இந்த வருடம் மட்டும் மேட்டூர் அணை 4 முறை நிரம்பியுள்ளது. தற்போது வரையிலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியிலேயே நீடிக்கிறது.  இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீடிப்பதால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று அணையின் நீர்வரத்து 5 ஆயிரத்து 993 கன அடியாக இருந்தது. இன்று காலையில் அது 5 ஆயிரமாக குறைந்தது. இதையடுத்து அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. பாசன சாகுபடிக்காக கால்வாயில் 750 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

click me!