குட் நியூஸ் மக்களே..! கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டது சேலம்..!

By Manikandan S R SFirst Published May 15, 2020, 2:45 PM IST
Highlights

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது முற்றிலும் நீங்கி உள்ளது. அங்கு மார்ச் 11ம் தேதி முதல் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின் சுகாதாரத் துறையினர் தீவிர பரிசோதனைகள் மேற்கொண்டதில் மாவட்டம் முழுவதும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு மருத்துவர்களால் கவனிக்கப்பட்டு வந்தனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோயின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு புதியதாக உறுதிப்படுத்தப்பட்டது.  இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 2,240 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர்.

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,637 ஆக அதிகரித்துள்ளது.  தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வந்த போதும் பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிவேகமாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ளன.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது முற்றிலும் நீங்கி உள்ளது. அங்கு மார்ச் 11ம் தேதி முதல் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின் சுகாதாரத் துறையினர் தீவிர பரிசோதனைகள் மேற்கொண்டதில் மாவட்டம் முழுவதும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு மருத்துவர்களால் கவனிக்கப்பட்டு வந்தனர். அதில் 32 பேர் நலமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். எஞ்சியிருந்த 3 பேரும் பூரண குணமடைந்ததை அடுத்து கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது. எனினும் அங்கு தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக சேலம் மாநகர் பகுதி நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

click me!