இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

Published : Sep 09, 2020, 07:04 PM IST
இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

சுருக்கம்

சேலம், நாமக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சேலம், நாமக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்;- சேலம், நாமக்கல், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், கோவை, திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியின் வாத்தலையில் 14 செ.மீ., தேவாலா, சமயபுரத்தில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
சாலையில் சென்ற பெண் மீது மோதி! அடுத்த நொடியே கவிழ்ந்த ஆட்டோ! பயணிகள் நிலை என்ன? பதற வைக்கும் வீடியோ!