தீவிர கண்காணிப்பில் 1,292 பேர்..! தமிழகத்தில் பீதியை கிளப்பும் கொரோனா..!

By Manikandan S R SFirst Published Mar 5, 2020, 12:14 PM IST
Highlights

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 1292 பேர் கொரோனா பாதிப்பு அச்சத்தால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மட்டும் 426 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். 

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3012 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. முன்னதாக இந்தியாவில் முதலில் கேரளாவில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்து முன்னணி பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்..! கோவையில் பரபரப்பு..!

இதனிடையே வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 1292 பேர் கொரோனா பாதிப்பு அச்சத்தால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மட்டும் 426 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். ராமநாதபுரத்தில் 92 பேரும், கோவையில் 65 பேரும், நாகையில் 62 பேரும், திருச்சியில் 58 பேரும், தூத்துக்குடியில் 54 பேரும், காஞ்சிபுரத்தில் 41 பேரும், மதுரையில் 32 பேரும் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை வெளிநாடுகளில் வந்த 96,729 பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடகக்காதல் ஆதரவாளருக்கு திரௌபதி சாதிவெறியாக தான் தெரியும்..! வீரமணியை வெளுத்து வாங்கிய ராமதாஸ்..!

click me!