கோவையில் மதுபானம் வாங்குவதற்காக நாட்டியப் பள்ளியில் சாமி சிலைகள் திருடிய இருவர் கைது!!

Published : Dec 07, 2022, 11:13 AM ISTUpdated : Dec 07, 2022, 11:14 AM IST
கோவையில் மதுபானம் வாங்குவதற்காக நாட்டியப் பள்ளியில் சாமி சிலைகள் திருடிய இருவர் கைது!!

சுருக்கம்

கோவையில் மதுபானம் வாங்குவதற்காக நாட்டிய பள்ளியில் இருவர் சிலைகளை திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியை சேர்ந்தவர் முரளி என்பவர் அதே பகுதியில் நாட்டியப் பள்ளி நடத்தி வருகிறார். இவருக்கு வயது 50. இவரது நாட்டிய பள்ளிக்கு கடந்த  சனிக்கிழமை நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து, அங்கிருந்த நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த திருட்டு தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளை குனியமுத்தூர் போலீசார் ஆய்வு செய்து வந்தனர். மேலும், திருட்டு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சி.சி.டி.வி காட்சிகளில், இரண்டு மர்ம நபர்கள் கட்டைப் பையில் சிலைகளை வைத்து எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து தலைமறைவான மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சுந்தராபுரம் மாச்சம்பாளையம் ஆறுமுக கவுண்டர் வீதியைச் சேர்ந்த கார்த்திக் (25), கிரண் (22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேரூர் நொய்யல் ஆறு… கார்த்திகை தீபத் திருநாளையொட்டி வழிபாடு!!

Watch : கோவை அருகே சாலைக் குழியில் சிக்கிய அரசு பேருந்தால் பரபரப்பு!

விசாரணையில், கூடுதலாக மதுபான பாட்டில்களை வாங்குவதற்காக சாமி சிலைகளை திருடியதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த சிலைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?