கோவையில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அபகரிப்பு செய்த வழக்கு.. பிரபல வழக்கறிஞர் கைது.!

Published : Nov 01, 2022, 03:09 PM ISTUpdated : Nov 02, 2022, 06:13 AM IST
கோவையில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அபகரிப்பு செய்த வழக்கு.. பிரபல வழக்கறிஞர் கைது.!

சுருக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் காந்திபுரம் சக்தி சாலையில் எல்லன் மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் ராமச்சந்திரன் என்பவர் அந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் என்பவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுத்து இருந்தார்.

கோவையில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அபகரிப்பு செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோயமுத்தூர் மாவட்டம் காந்திபுரம் சக்தி சாலையில் எல்லன் மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் ராமச்சந்திரன் என்பவர் அந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் என்பவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுத்து இருந்தார். இதனை அடுத்து அந்த டாக்டர் உமாசங்கர் அந்த மருத்துவமனையை சென்னை மருத்துவமனை என பெயர் மாற்றம் செய்து நடத்தி வந்தார்.

இந்நிலையில் அவர்களிடையே வாடகை தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக டாக்டர் ராமச்சந்திரன் அடியாட்களுடன் வந்து மருத்துவமனைக்குள் நுழைந்து ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை அடித்து விரட்டி விட்டு மருத்துவமனையை கைப்பற்றினார். ஆனால், காவல் துறையினர் டாக்டர் உமாசங்கர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த டாக்டர் உமாசங்கர் நடைபயிற்சி மேற்கொண்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் மோதி உயிரிழந்தார். இந்த விபத்து வழக்கு தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனிடையே ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அபகரிக்க முயன்ற வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட பொழுது டாக்டர் உமாசங்கர் மீது பொய் வழக்கு போடப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் இதன் பின்னணியில் காவல் துறையினர் சிலரும் உடந்தையாக இருந்து இருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து  எல்லன் மருத்துவமனை தலைவர் டாக்டர் ராமச்சந்திரன், டாக்டர் காமராஜ் மற்றும் கூலிப் படையினர் என 13 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். அவர்களை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்த போது ,டாக்டர் ராமச்சந்திரனுக்கு உறுதுணையாக அடியாட்களை ஏற்பாடு செய்தது கொங்கு வேளாண் கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவரும், வழக்கறிஞருமான ராஜேந்திரன் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து ராஜேந்திரனை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில் அவர் தலைமறைவானார். மேலும் வழக்கறிஞர் ராஜேந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட முன் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கறிஞர் ராஜேந்திரன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவரைப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் மூன்று தனி படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கோவை சி.பி.சி.ஐ.டி போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?