சாய்பாபா பேரை சொல்லி மோசடி… ரூ1.45 கோடியை இழந்த கோவை தொழிலதிபர்!!

By Narendran SFirst Published Nov 11, 2022, 11:52 PM IST
Highlights

சாய்பாபா அருளால் பல கோடி சம்பாதிக்களால் கூறி கோவை தொழிலதிபரடம் பல தவணைகளாக ரூ.1.45 கோடி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சாய்பாபா அருளால் பல கோடி சம்பாதிக்களால் கூறி கோவை தொழிலதிபரடம் பல தவணைகளாக ரூ.1.45 கோடி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் டிராவல்ஸ் மற்றும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கன்டைனர் விற்பனை பணிகளை செய்து வருகிறார்.  மேலும் சென்னையில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதவற்ற இல்லங்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் பல லட்சத்திற்கு ஒவ்வொரு மாதமும் உதவி செய்வதை அறிந்த சென்னையை சேர்ந்த லட்சுமிபதி மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகிய இருவரும் சந்திரசேகரனை அனுகியதாக கூறப்படுகிறது. மேலும் நிர்மலா சாய்பாபாவின் மறு அவதாரம் என்றும், தங்களது வீடு பாபா வசிக்கும் வீடு எனக் கூறி வீட்டிற்கு அழைத்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வீட்டிறகு சென்ற சந்திரசேகரனிடம் தாங்கள் சொல்லும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் ரூ.200 கோடி முதல் 2 ஆயிரம் கோடி வரை சம்பாதிக்கலாம் என்றும் அதன் மூலம் கூடுதல் சமூக சேவையை செய்ய முடியும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: கணவருக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசம்.. திருமணம் செய்ய கட்டாயப்படுத்திய இளம்பெண் கொலை.. வெளியான பகீர் தகவல்.!

மேலும் நிர்மலா அப்பகுதியில் உள்ளவர்களிடமும் பாபாவின் மறுஅவதாரம் எனக் கூறி குறி சொல்லி வருவதோடு, அவரை சொன்னதை நம்பி பலர் முதலீடு செய்து பணம் சம்பாதித்தாக கூறியுள்ளனர். இதனை நம்பிய சந்திரசேகர் லட்சுமிபதி பங்குதாரராக உள்ள நிறுவனம், மற்றும் அவர்களது உறவினராக உள்ள மோகன்தாஸ், ரேகா, கனேசன், கஞலட்சுமி, உமாபதி, மாலினி, ஆகியோரிடம் கோவை சிங்காநல்லூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து பல தவணைகளாக ரூ.1.45 கோடி பணத்தை கொடுத்துள்ளார். 3 மாதத்தில் லாபம் கிடைக்கும் என கூறிய அவர்கள் முதல் தவணையாக ரூ.5 லட்சத்தை லாபம் என கூறி கொடுத்ததுடன் அதிலிருந்து ரூ.3 லட்சத்தை பாபா கோவிலுக்கு நன்கொடையாக வழங்க வேண்டுமென கூறி பெற்றுள்ளனர். தொடர்ந்து அவர்களது வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி வந்த சந்திரசேகரன், ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்து பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: உதவுவது போல் நடித்து பெண்ணிற்கு பாலியல் தொல்லை… கல்லூரி பேராசிரியர் கைது… வீடியோ வெளியானதால் பரபரப்பு!!

அப்போது பணத்தை கொடுக்க முடியாது எனக்கூறிதோடு ஆட்களை வைத்து மிரட்டியுள்ளனர். மேலும் காவல் துறை அதிகாரி எனக் கூறி ஒருவர் பேசியதாகவும், அனைத்து ஆவணங்களை கொடுத்துவிட்டு போகவேண்டும் எனவும் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதை அடுத்து சந்திரசேகரன் காவல்துறையினரிடம் புகார் அளித்ததன் பேரில் லட்சுமிபதி, நிர்மலா உள்ளிட்ட 8 பேர் மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் அளித்து 3 மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் சந்திரசேகரன் மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து புகார் அளித்தார். இதை அடுத்து 8 பேருக்கும் நேரில் ஆஜராக குற்றபிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் 8 பேரும் சம்மனுக்கு ஆஜர் ஆகாவில்லை என கூறப்படுகிறது. இதே போல சென்னை, நாமக்கல், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்நத பல பேரிடம் மோசடி செய்திருக்க வாய்ப்பு உள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரசேகரன் போலீஸாரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!