நிலவில் தரையிறங்கும் சந்திரயான் – 3; வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா?

Published : Aug 22, 2023, 06:25 PM IST
நிலவில் தரையிறங்கும் சந்திரயான் – 3; வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா?

சுருக்கம்

உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான ஆர் பிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என்ற ஒரு பில்லியன் நம்பிக்கையுடன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா மோதுகின்றன. இந்தப் போட்டி இரண்டு ஆட்டங்கள் கொண்டதாக இன்றும், நாளையும் நடக்கிறது. இரண்டு ஆட்டங்களின் முடிவில் வெற்றியாளர் இல்லை என்றால், இறுதிப் போட்டி டை-பிரேக்கர்களுக்குச் செல்லும்.

இரண்டு போட்டிகள் கொண்ட செஸ் இறுதிப் போட்டி தொடங்கியது – பிரக்ஞானந்தா vs மேக்னஸ் கார்ல்சன் பலப்பரீட்சை!

இந்தியாவின் நிலவு பணியான சந்திரயான் 3 தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நாளாகவும் புதன்கிழமை உள்ளது. சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் போது 18 வயது இளைஞன் உலகளாவிய நிகழ்வில் வெற்றி பெற்றால் அது முக்கியமானதாக இருக்கும் என்று செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார்.

யார் இந்த பிரக்ஞானந்தா, படைத்த சாதனைகள் என்னென்ன?

இளம் வீரரான பிரக்ஞானந்தா அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்தியர். இது இரண்டு கேம் மேட்ச், இன்றும், நாளையும் அவர் விளையாடுவார். எனக்குப் பிறகு உலகக் கோப்பையை வெல்லும் முதல் இந்தியராக பிரக்ஞானந்தா இருக்க கூடும். அதுவும் இந்த நாள் விசித்திரமான நாளாக இருக்க கூடும். ஏனென்றால், சந்திரயான் நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.

World Cup 2023: உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது – கங்குலி!

பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் இருவரும் பல்வேறு போட்டிகளில் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். ஆனால், குறைவான போட்டிகளில் மட்டுமே அவர் வெற்றி பெற்றிருக்கிறார். எனினும், கிளாசிக்கல் செஸ்ஸில் இருவரும் ஒரு போட்டியி மோதியுள்ளனர். அந்தப் போட்டியானது டிராவில் முடிந்தது. ரேபிட்/எக்ஸிபிஷன் கேம்களில், கார்ல்சென் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஆறு ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. என்னதான் கார்ல்சன் அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும், சமீபத்திய முடிவுகள் எல்லாம் பிரக்ஞானந்தாவிற்கு சாதகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியன் மீண்டும் உதிக்கும் - இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து யுஸ்வேந்திர சஹால் பதிவு!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

இந்தியாவுக்கு மீண்டும் வருவேன்! கால்பந்து ரசிகர்களுக்கு மெஸ்ஸி சொன்ன குட்நியூஸ்!
IND vs SA T20: ஆல்ரவுண்டர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. மாற்று வீரர் இவரா? ரசிகர்கள் ஷாக்!