
கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கௌதம் காம்பீர், இந்த முறை சென்னை அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
11வது ஐபிஎல் டி20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. இதற்கான ஏலம் வரும் 28ம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.
ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். அந்த வகையில் சென்னை அணியின் ஆஸ்தான வீரர்களான தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா ஆகிய மூவரையும் அந்த அணி தக்க வைத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் தொடரை வென்று கொடுத்த அந்த அணியின் கேப்டனாக இருந்த கௌதம் காம்பீரை இந்த முறை சென்னை அணி ஏலத்தில் எடுக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரவுகின்றன. சமூக வலைதளங்களில் இந்த தகவல் வைரலாக பரவுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.