பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: முன்னணி வீராங்கனையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் உக்ரைனின் எலினா...

First Published Jan 6, 2018, 12:23 PM IST
Highlights
Brisbane International Tennis Ukraine player advanced to next level


பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா.

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான ஸ்விடோலினாவும், உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர்.

இந்த ஆட்டத்தில் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் கரோலினாவை வீழ்த்தினார் ஸ்விடோலினா. இதன்மூலம், 4 முயற்சிகளில் முதல் முறையாக பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஸ்விடோலினா முன்னேறியுள்ளார்.

இறுதிச்சுற்றில் அவர் பெலாரஸின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சை எதிர்கொள்ள இருக்கிறார்.

முன்னதாக சாஸ்னோவிச், போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த லாத்வியாவின் அனஸ்தாஸிஜா செவஸ்டோவாவை 7-6(3), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

tags
click me!