
ஷென்ஸென் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ருமேனியாவின் சைமோனா ஹேலப் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
ஷென்ஸென் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் தனது அரையிறுதிச் சுற்றில் சக நாட்டவரான இரினா கேமிலியா பெகுவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்தப் போட்டியில் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் இரினா கேமிலியா பெகுவை வீழ்த்தி சைமோனா ஹேலப் வெற்றி பெற்றார். இதன்மூலம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இதனையடுத்து இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் கேத்தரினா சினியாகோவாவை எதிர்கொள்கிறார் சைமோனா.
கேத்தரினா தனது அரையிறுதியில் ரஷியாவின் மரியா ஷரபோவாவை 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.