செய்ன் நதிக்கரையில் பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடக்க விழா –10,714 விளையாட்டு வீரர்கள் படகில் ஊர்வலம் செல்ல ஏற்பாடு

Published : Jul 21, 2024, 01:46 PM ISTUpdated : Jul 21, 2024, 01:50 PM IST
செய்ன் நதிக்கரையில் பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடக்க விழா –10,714 விளையாட்டு வீரர்கள் படகில் ஊர்வலம் செல்ல ஏற்பாடு

சுருக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவானது ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெறாமல் வரலாற்றில் முதல் நிகழ்வாக செய்ன் நதிக்கரையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

உலக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த தருணம் இன்னும் 5 நாட்களில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 3ஆவது முறையாக 2024 கோடைகால ஒலிம்பிக் தொடர் தொடங்குகிறது. பாரீஸ் ஒலிம்பிக் 2024 விளையாட்டு போட்டி நடத்துவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரூ.61,500 கோடி வரையில் செலவிட்டுள்ளனர். இதில் ஒலிம்பிக் போட்டியில் முதல் பரிசு வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கத்தின் விலை ரூ.75 லட்சம் ஆகும். இதே போன்று வெள்ளிப் பதக்கத்தின் விலை ரூ.50 லட்சம, வெண்கலப் பதக்கத்தின் விலை ரூ.30 லட்சம் ஆகும்.

எல்லோரும் கேட்டாங்க, பவுண்டரி லைனை தொட்டயா? சூர்யகுமார் யாதவிற்கும் கூட சந்தேகம் –அக்‌ஷர் படேல் விளக்கம்!

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர் வரும் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தமாக 32 விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. இதில் 329 நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேலும், 10,714 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர். இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர். இதில் அனைவரது பார்வையும் நீரஜ் சோப்ரா, பிவி சிந்து, மீராபாய் சானு, அனுஷ் அகர்வாலா, ரிதம் சங்வான், மனு பாகர், ரமீதா ஜிண்டால், இளவேனில் வளரிவன், அங்கிதா பகத், சூரஜ் பன்வர், பிரியங்கா கோஸ்வாமி ஆகியோர் உள்பட பலர் மீது விழுகிறது. இவர்கள் இந்திய நாட்டிற்காக பதக்கம் வென்று கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSK, IPL 2024: ரிஷப் பண்ட்டை விடுவிக்கும டெல்லி கேபிடல்ஸ்–சந்தோஷமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் பண்ட்?

இந்த நிலையில் தான் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவை செய்ன் நதிக்கரையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெறாமல் செய்ன் ஆற்றில் நடைபெறுகிறது. செய்ன் நதிக்கரையில் 4 மைல் தூரம் வரையில் 160 படகுகள் மூலமாக 10,714 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஊர்வலமாக அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்வலமானது அதிக பார்வையாளர்கள் பார்க்கும் தளமான டிரோகாடெரோவில் முடிவடைகிறது.

RCB Retained Players:ஆர்சிபிக்கு தாவும் கேஎல் ராகுல் – ஃபாப் டூப்ளெசிஸூக்கு பிறகு ஆர்சிபி கேப்டனாக வர வாய்ப்பு

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!