
கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் சுரேஷ் ரெய்னா தவித்துவந்தார்.
அதிரடி பேட்டிங், ஸ்பின் பவுலிங், சிறந்த ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் சிறந்து விளங்கிய சுரேஷ் ரெய்னா, யோ-யோ டெஸ்டில் தேர்வாகாததால், இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
அதனால் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவந்தார். அண்மையில், யோ-யோ டெஸ்டில் தேர்வாகினார் ரெய்னா. அதுகுறித்த மகிழ்ச்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் ரெய்னா பகிர்ந்துகொண்டார்.
ஆனாலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரெய்னாவுக்கு இடம்கிடைக்கவில்லை.
ஆனால், டி20 தொடரில் ரெய்னாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்திய அணியில் விளையாடாத ரெய்னாவுக்கு சர்வதேச போட்டியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.