
11வது சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் இரண்டு தமிழக வீரர்களை பெங்களூரு அணி எடுத்துள்ளது.
11வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 7 இந்திய வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இதில், எதிர்பாராத விதமாக முரளி விஜய், எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. ஆனால், சென்னையின் செல்லப்பிள்ளையான ரவிச்சந்திரன் அஷ்வினை 7.6 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி எடுத்தது. எதிர்பார்த்ததை விட அதிகவிலைக்கு அஷ்வின் எடுக்கப்பட்டதால், ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி அவரை சென்னை அணி தக்கவைக்கவில்லை.
அவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக்கை ரூ.7.4 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்தது.
இளம் தமிழக வீரர்களை எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டாத நிலையில், தமிழக வீரர்களுக்கு பஞ்சாபும் பெங்களூருவும் முக்கியத்துவம் கொடுத்தன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.