டிராவில் முடிந்த தென் கொரியா – சீனா போட்டி: புள்ளிப்பட்டியலில் சீனாவுக்கு கடைசி இடம்!

Published : Aug 06, 2023, 07:51 PM IST
டிராவில் முடிந்த தென் கொரியா – சீனா போட்டி: புள்ளிப்பட்டியலில் சீனாவுக்கு கடைசி இடம்!

சுருக்கம்

ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி டிராபி தொடரில் இன்று நடந்த தென் கொரியா மற்றும் சீனா அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.

சென்னையில் 7ஆவது ஆசிய ஆண்களுக்கான ஹாக்கி டிராபி தொடர் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடர் வரும் 12 ஆம் தேதி வரையில் சென்னையில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறை ஆண்களுக்கான ஆசிய ஹாக்கி டிராபியை கைப்பற்றியுள்ளன. தென் கொரியா அணி ஒரு முறை டிராபியை கைப்பற்றியிருக்கிறது.

அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய அரியலூர் வீரர் செல்வம் கார்த்தி!

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. இதில் முதல் போட்டியில் தென் கொரியா மற்றும் சீனா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்கவே போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து நடந்த 2 ஆவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் ஜப்பான் 3 கோல்கள் அடித்து முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தான் 2 கோல் அடித்துள்ளது. இன்று நடக்கும் கடைசி போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவும், நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் மலேசியாவும் மோதுகின்றன.

Asian Champions Trophy 2023: ஒரே நாளில் 3 போட்டிகள்: இரவு 8.30 மணிக்கு இந்தியா – ஜப்பான் பலப்பரீட்சை!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!