சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக சாய்னா நேவால்... தந்தை மகிழ்ச்சி

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 05:56 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக சாய்னா நேவால்... தந்தை மகிழ்ச்சி

சுருக்கம்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள ஆணைக்குழு உறுப்பினராக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பேட்மிண்டன் போட்டிகளில் பல்வேறு வெற்றிகளைக் குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் சாய்னா நேவால். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அவர், முழங்கால் காயம் காரணமாக முதல் சுற்று போட்டிகளிலேயே வெளியேறினார்.

தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு காயம் குணமடைந்து விரைவில் பயிற்சிக்கு திரும்ப உள்ளார் சாய்னா. இந்த நிலையில் சாய்னா நேவாலை கவுரவிக்கும் வகையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள ஆணைக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவருக்கு, சர்வதேச ஒலிம்பிக் போட்டியின் தலைவர் தாமஸ் பாச்சிடம் இருந்து அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது நடைபெற்ற ஐ.ஓ.சி. தடகள ஆணைக்குழு தேர்தலில் தங்களது வேட்புமனுவை பரிசீலித்து தங்களை உறுப்பினராக நியமித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள ஆணைக்குழுவில் உறுப்பினராக சாய்னா நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவரது தந்தை ஹர்வீர் சிங் தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
CSK: “சேப்பாக்கத்தில் இன்று உயிர்ப்போர்..! தோற்றால் CSK கனவு முடிவு – SRH காத்திருக்கும் அதிர்ச்சி!”