தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்தியாவின் சாய் பிரனீத் அதிர்ச்சி தோல்வி!

By Rsiva kumarFirst Published Feb 4, 2023, 10:41 AM IST
Highlights

பாங்காங்கில் நடந்த தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத் தோல்வியடைந்து வெளியேறினார்.
 

பாங்காங்கில் தாய்லாந்து மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத், தென் கொரியாவின் ஜியோன் ஹியோக் ஜின்னை எதிர் கொண்டார். இந்தப் போட்டியில் முதல் செட்டை 24-22 என்று கைப்பற்றிய சாய் பிரனீத், 2ஆவது செட்டை 7-21 என்று இழந்தார். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் சாய் பிரனீத் 22-20 என்று கைப்பற்றி காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி, யுகி பாம்ப்ரி தோல்வி!

இதில், நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத் மற்றும் சீனாவின் லீ ஷீ பெங் ஆகியோர் மோதினர். முதல் செட்டை சீன வீரர் லீ ஷீ பெங் 21-17 என்று வென்றார். இதே போன்று 2ஆவது செட்டை சாய் பிரனீத் 23-21 என்று கைப்பற்றினார். இறுதியாக வெற்றியை தீர்மானிக்கும் அடுத்த செட்டில் சீன வீரர் 21-18 என்று கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து சாய் பிரனீத் வெளியேறியுள்ளார்.

IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்

click me!