உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்திய வீரர் ருத்ராங்ஷ் பாட்டீல் வெண்கல பதக்கம்!

Published : Mar 25, 2023, 12:37 PM IST
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்திய வீரர் ருத்ராங்ஷ் பாட்டீல் வெண்கல பதக்கம்!

சுருக்கம்

மத்தியப்பிரதேசத்தில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ருத்ராங்ஷ் பாட்டீல் வெண்கல பதக்கம் வென்றார்.  

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்து வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நேற்று நடந்த ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ருத்ராங்க்‌ஷ் பாட்டீல் 262.3 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய சீனாவின் ஷெங் லிஹாவோ ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பைபிள் பிரிவில் 264.2 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.

 

 

முதல் IPL vs முதல் WPL - இறுதிப் போட்டியில் அப்போ தல தோனி; இப்போ ஹர்மன்ப்ரீத் கவுர்: அப்போ வெற்றி யாருக்கு?

டியூ லின்ஷூ 263. 3 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் கைப்பற்றினார். இதே போன்று பெண்களுக்கான 10 மீட்டர் பிரிவில் சீனாவை சேர்ந்த ஹூவாங் யூட்டிங் தங்கம் வென்றார். இதில் இந்தியாவின் ரமிதா 260.5 புள்ளிகளுடன் 4ஆவது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த ஸ்டேடியத்தையும் அதிர வைத்த இசி வாங்: முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து வரலாற்று சாதனை!

மூன்றாம் நாளின் முடிவில் சீனா 5 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் வென்று பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதையடுத்து, இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெணகல பதக்கம் கைப்பற்றி 2ஆவது இடம் பிடித்தது. இந்த உலக கோப்பை போட்டியில் இரண்டு நாளில் ருத்ராங்க்ஷ் இரண்டு வெண்கல பதகங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் 2023: ஜிஎஸ்டி இல்லாமல் மட்டும் ரூ.20,000 வரையிலும் விற்கப்படும் ஐபிஎல் டிக்கெட்!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?