மூவர்ணத்தில் உடை அணிந்து அணி வகுப்பு நடத்திய வீரர், வீராங்கனைகள்–கொடியை ஏந்தி சென்ற பிவி சிந்து, சரத் கமல்

Published : Jul 27, 2024, 12:30 AM ISTUpdated : Jul 27, 2024, 09:45 AM IST
மூவர்ணத்தில் உடை அணிந்து அணி வகுப்பு நடத்திய வீரர், வீராங்கனைகள்–கொடியை ஏந்தி சென்ற பிவி சிந்து, சரத் கமல்

சுருக்கம்

பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் திருவிழாவின் தொடக்க விழா தற்போது செய்ன் நதிக்கரையில் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 1900 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் தொடர் நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் தற்போது பாரிஸில் ஜூலை 26ஆம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் ஸ்டேடியத்திற்கு வெளியில் செய்ன் நதிக்கரையில் தொடங்கியுள்ளது. இந்த தொடரில் இடம் பெற்ற 10,714 விளையாட்டு வீரர்கள் 160க்கும் அதிகமான படகுகள் கிட்டத்தட்ட 6 கிமீ தூரம் வரையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர்.

6 பவுண்டரி, 10 சிக்ஸ், ஷிவம் சிங் அடிச்ச அடில திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி – புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம்!

ஆஸ்டர்லிட்ஸ் பகுதியில் தொடங்கி டிரோகெடெரோ வரையில் ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுத்து செல்கின்றனர். முதல் நாடாக ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் கொடியை ஏந்தி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தியது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் தென் ஆப்பிரிக்கா, அல்ஜீரியா, அங்கோலா, ஆண்டிகுவா, பர்புடா, சவுதி அரேபியா, அர்ஜெண்டினா, அரூபா, ஆஸ்ட்ரியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பிரேசில், பல்கேரியா, புரூண்டி என்று ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அணி வகுத்து சென்றனர்.

பாகிஸ்தான் மகளிர் அணியை பந்தாடிய இலங்கை மகளிர் அணி – 6ஆவது முறையாக ஃபைனலில் இந்தியா – இலங்கை பலப்பரீட்சை!

இதற்கிடையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தி காகா ஷோ, பிரஞ்சு புரட்சியை மையப்படுத்திய டான்ஸ் ஷோ, சுதந்திரம் என்று கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2500 கலைஞர்கள் இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், 3 லட்சம் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை நேரடியாக கண்டு ரசிக்கின்றனர். இந்தியா சார்பில் பிவி சிந்து மற்றும் சரத் கமல் இருவரும் இந்தியா நாட்டிற்காக தேசிய கொடியை ஏந்தி அணி வகுப்பு நிகழ்ச்சி நடத்தினர். இதில் இந்திய வீராங்கனைகள் மூவர்ண நிறத்தில் பாரம்பரிய உடை அணிந்தும், வீரர்கள் சமாதானத்திற்கு பெயர் போன வெள்ளை நிறத்தில் உடை அணிந்து அணி வகுப்பு நடத்தினர். இந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.

Womens Asia Cup 2024: இலங்கைக்கு எதிரான 140 ரன்கள் குவித்த பாகிஸ்தான் – இறுதிப் போட்டி யாருக்கு?

 

 

 

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?