நெல்லையில் தோனி.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல

By karthikeyan VFirst Published Aug 5, 2018, 12:58 PM IST
Highlights

நெல்லை வந்த தோனியை காண ரசிகர் கூட்டம் அலைமோதியது; தோனியை கண்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

தமிழ்நாட்டில் டிஎன்பில் போட்டிகள் நடந்துவருகின்றன. இதில், கோவை மற்றும் மதுரை அணிகளுக்கு இடையேயான போட்டியை டாஸ் போட்டு தொடங்கிவைக்க இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நெல்லை வந்தார். 

அந்த போட்டியை டாஸ் போட்டு தொடங்கிவைத்தார் தோனி. முன்னதாக நெல்லை வந்த தோனி, குண்டாறு அருகேயுள்ள ரிசார்ட்டில் தங்கினார். தோனியை கண்ட மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். 

ரிசார்ட்டில் ஓய்வு எடுத்த தோனி, பாதுகாவலர்களுடன் டிரெக்கிங் சென்றார். பின்னர் சாமி அருவிக்கு சென்று ஆனந்த குளியல் போட்டார். தோனியின் நெல்லை வருகையால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தோனி நெல்லை வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. 
 

click me!