6ஆவது மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: லவ்லினா, நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தல்!

Published : Dec 27, 2022, 09:44 AM IST
6ஆவது மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: லவ்லினா, நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தல்!

சுருக்கம்

போபாலில் நடந்த தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் லவ்லினா, நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 6ஆவது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 75 கிலோ இறுதிப் போட்டியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த லவ்லினா, சர்வீசஸ் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் அணியின் அருந்ததி சௌத்ரியை எதிர்த்துப் போட்டியிட்டார். இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லவ்லினா 5-0 என்ற கணக்கில் அருந்ததி சௌத்ரியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

IPL 2023: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

இதே போன்று நடந்த 50 கிலோ எடை பிரிவுக்கான இறுதிப் போட்டியில் உலக சாம்பியனான தெலுங்கானா அணியின் நிகாஜ் ஜரீன், ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் அணி அனாமிகாவை எதிர்கொண்டார். இதில், அனாமிகாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.

பாண்டிங், லாரா, ஜெயவர்தனே, கிரேம் ஸ்மித் ஆகிய லெஜண்ட் வீரர்களின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்! புதிய வரலாறு

போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பரிசுகளை வழங்கினார். இந்த போட்டியில் 5 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 10 பதக்கங்களை ரெயில்வே அணி குவித்து மீண்டும் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

வெறித்தனமான CSK ரசிகர்.. திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை போட்ட கிரிக்கெட் ஒப்பந்தம்!
IPL: தோனி முதல் ரிஷப் பண்ட் வரை.. ஐபிஎல்லில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!