
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான படுத்துக் கொண்டு சுடுதல், ஒரு முட்டியில் அமர்ந்து கொண்டு சுடுதல், எழுந்து நின்று சுடுதல் என்று 50மீ ஏர் ரைபிள் 3 பொஷிசன்ஸ்களில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் சிங் இந்தியாவிற்கு 3ஆவது வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். இதற்கு முன்னதாக மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங் மற்றும் மனு பாக்கர் ஜோடி இந்தியாவிற்கு 2ஆவது பதக்கத்தை வென்று கொடுத்தது.
இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் 50மீ ஏர் ரைபிள் 3பி பிரிவில் இந்தியா சார்பில் ஸ்வப்னில் சிங் போட்டியிட்டார். இதில் முதல் சீரிஸை 9.6 புள்ளிகள் உடன் குசலே தனது ஷுட் கணக்கை தொடங்கினார். அதன் பிறகு முதல் சீரிஸை 50.8 புள்ளிகளுடன் முடித்தார். 2ஆவது சீரிஸை 9.9 புள்ளிகளுடன் ஆரம்பித்து 4 முறை 10 புள்ளிகள் பெற்று கடைசியாக அந்த சீரிஸை 101.7 புள்ளிகளுடன் 6ஆவது இடம் பிடித்திருந்தார்.
கடைசியாக 7 நிமிடம் மட்டுமே இருந்தது. இதில் குசலே 3 முறை 10.5 புள்ளிகளும், 2 முறை 10.6 புள்ளிகளும் பெற்று 5ஆவது இடத்திற்கு முன்னேறினார். இறுதியாக நடைபெற்ற எலிமினேஷனிலிருந்து தப்பித்து 451.4 புள்ளிகள் பெற்று 3ஆவது இடம் பிடித்து இந்திய அணிக்கு 3ஆவது வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.
ஸ்வப்னில் சிங் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 29. கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலை இவருக்கு கிடைத்துள்ளது. இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் டிக்கெட் பரிசோதகராகவே தனது வாழ்க்கையை தொடங்கி, கிரிக்கெட்டியிலும் பயிற்சி பெற்று இந்திய அணியில் இடம் பிடித்தார்.
அதே போன்று ஸ்வப்னில் சிங்கும் டிக்கெட் பரிசோதகராக வாழ்க்கையை தொடங்கி துப்பாக்கி சுடுதலில் பயிற்சியும் பெற்று வந்து தற்போது இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார். இதன் மூலமாக இந்த பிரிவில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஸ்வப்னில் சிங் படைத்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.