ஆண்களுக்கான தடகளப் போட்டி: 20கிமீ ரேஸ் வாக்கில் இந்தியா தோல்வி; 6 கிலோ மீட்டரிலேயே வெளியேறிய அக்‌ஷ்தீப் சிங்!

Published : Aug 01, 2024, 03:44 PM ISTUpdated : Aug 01, 2024, 04:45 PM IST
ஆண்களுக்கான தடகளப் போட்டி:  20கிமீ ரேஸ் வாக்கில் இந்தியா தோல்வி; 6 கிலோ மீட்டரிலேயே வெளியேறிய அக்‌ஷ்தீப் சிங்!

சுருக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான தடகளப் போட்டியில் 20கிமீ ரேஸ் வாக்கில் அக்‌ஷ்தீப் சிங் 6கிமீ தூரம் சென்ற நிலையில் பாதியிலேயே வெளியேறியுள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 6ஆவது நாளான இன்று காலை 11 மணிக்கு தடகளப் போட்டி தொடங்கியது. இதில் ஆண்களுக்கான 20கிமீ ரேஸ் வாக் பிரிவில் இந்தியா சார்பில் தேசிய சாதனை படைத்த அக்‌ஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் பிஸ்ட் ஆகிய மூவரும் போட்டி போட்டனர். இதில் அக்‌ஷ்தீப் சிங் 6 கிமீ தூரம் சென்ற நிலையில் பாதியிலேயே பின் வாங்கியுள்ளார்.

Paris 2024 Olympics: இந்தியா விளையாடும் போட்டிகள் - Day 6: இந்தியாவிற்கு மீண்டும் பதக்கம் கிடைக்குமா?

ஆனால், விகாஷ் சிங் மற்றும் பரம்ஜித் சிங் ஆகியோர் 30 மற்றும் 31ஆவது இடங்களை பிடித்துள்ளனர். விகாஷ் சிங் 1 மணி நேரம் 22 நிமிடங்களில் 20கிமீ தூரத்தை கடந்து 30ஆவது இடம் பிடித்தார். ஆனால், பரம்ஜீத் சிங் 1 மணி நேரம் 23 நிமிடங்கள் 48 வினாடிகளில் இலக்கை கடந்து 37ஆவது இடம் பிடித்துள்ளார்.

ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த பிரையன் டேனியல் பின்டேடோ ஒரு மணி நேரம், 18 நிமிடங்கள் மற்றும் 55 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இதே போன்று பிரேசில் நாட்டைச் சேர்ந்த கேயோ போன்பார்ம் ஒரு மணி நேரம், 19 நிமிடங்கள் 09 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அல்வாரோ மார்ட்டின் ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் 11 வினாடிகளில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்தியாவிற்கு 3ஆவது பதக்கம் – 50மீ ஏர் ரைபிள் 3பி பிரிவில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரராக குசலே சாதனை!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!