கிரிக்கெட் போட்டியில் 2-வது வெற்றியை குவித்தது இந்திய மகளிர் அணி...

 
Published : Jun 05, 2018, 10:38 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
கிரிக்கெட் போட்டியில் 2-வது வெற்றியை குவித்தது இந்திய மகளிர் அணி...

சுருக்கம்

Indian women team won 2nd match

ஆசியக் கோப்பை மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது வெற்றியை பெற்று அசத்தியது இந்திய மகளிர் அணி.
 
ஆசியக் கோப்பை மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. 

ஆறு நாடுகள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் மலேசியாவை 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று அசத்தியது.

இந்த நிலையில் நேற்று இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவும் - தாய்லாந்தும் மோதின. முதலில் ஆடிய இந்திய மகளிரணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 132 ஓட்டங்களை எடுத்தது. ஹர்மன்பிரீத் கெளர் 27 ஓட்டங்கள், ஸ்மிருதி மந்தானா 22 ஓட்டங்கள் குவித்தனர். 

பின்னர் ஆடிய தாய்லாந்து அணி 8 விக்கெட்டை இழந்து 66 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் நட்டாயா 21 ஓட்டங்களை குவித்தார்.

இந்திய அணியின் ஹர்மன்பிரீத் கெளர் 3 விக்கெட்டையும், தீப்தி சர்மா 2 விக்கெட்டை வீழ்த்தினர். 

இறுதியில் இந்தியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அசத்தியது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி
ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!