முதல் கோல் அடித்த மகேஷ் நௌரேம் சிங்: நேபாளை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

Published : Jun 24, 2023, 10:00 PM IST
முதல் கோல் அடித்த மகேஷ் நௌரேம் சிங்: நேபாளை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

சுருக்கம்

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் நேபாளை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.Cri

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில், இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் கேப்டன் சுனில் சேத்தரி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியைத் தொடர்ந்து இன்று இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அட்டவணை ரெடி; ஜூன் 27ல் வெளியீடு!

இந்தப் போட்டி தொடங்கிய முதல் அரை மணி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவே இல்லை. ஆகையால், முதல் அரைமணி நேரம் டிராவில் முடிந்தது. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் முதல் அரை மணி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 4 போட்டிகளில் கேப்டன் சுனில் சேத்தரி கோல் அடித்தார். ஒரு போட்டி டிராவில் முடிந்தது. அதன் பிறகு கேப்டன் சுனில் சேத்தரி ஒரு கோல் அடித்து கொடுக்க, இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இது சுனில் சேத்தரி அடித்த 91ஆவது கோல் ஆகும்.

10 பவுண்டரி, 5 சிக்ஸர் – சதம் அடித்த கேப்டன் அருண் கார்த்திக்: நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி!

இதைத் தொடர்ந்து, மகேஷ் நௌரேம் சிங் தனது முதல் கோல் அடித்துக் கொடுக்க, இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசியாகவும் இந்தியாவிற்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனினும், அதில் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியாக இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா, நேபாள் அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நடராஜனுக்கு கையில் காயம்: கிரிக்கெட் மைதானம் திறந்த போது எதிர்பாராமல் நடந்த விபரீதம்!

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!