இந்தியா, பாகிஸ்தான் வீரர்களிடையே மோதல்: இந்திய பயிற்சியாளர் வெளியேற்றம்!

Published : Jun 21, 2023, 10:25 PM IST
இந்தியா, பாகிஸ்தான் வீரர்களிடையே மோதல்: இந்திய பயிற்சியாளர் வெளியேற்றம்!

சுருக்கம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தெற்காசிய கால்பந்து போட்டியின் போது வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில், இந்திய பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டார்.

தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடந்தது. இந்தப் போட்டியின் 16ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் சேத்தரி 2 கோல் அடித்தார். இதன் மூலமாக இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ரூ.2000 கோடி மதிப்பிலான ட்ரோன் நிறுவனத்தை நடத்தி வரும் தோனியின் பிஸினஸ் பார்ட்னர்!

தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள், கோல் அடிக்க விடாமல் தடுத்த போதிலும், இந்திய வீரர் சேத்தரி 2 கோல் அடித்தார். ஒரு கட்டத்தில் இந்திய வீரர் ப்ரீதம் கோட்டலுக்கு நடுவர் ஃபவுல் கொடுத்து, பாகிஸ்தான் வீரர் அப்துல்லா இக்பாலை த்ரோ செய்ய அழைத்ததால், இந்திய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அவரை தடுத்தார். இதன் காரணமாக பாக் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஷாஜாத் அன்வர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நடுவர் இந்திய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கை உடனடியாக வெளியேற்றினார். எனினும், பாகிஸ்தான் பயிற்சியாளர் ஷாஜாத் அன்வருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு எச்சரிக்கை (மஞ்சள் அட்டை) மட்டுமே வழங்கப்பட்டது.

எனினும், சுனில் சேத்தரி அடுத்தடுத்து கோல் அடிக்கவே இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!