Olympics 2024:பதக்க வேட்டைக்காக பாரிஸ் வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு – பிவி சிந்து உள்பட 49 வீரர்கள் வருகை

Published : Jul 23, 2024, 11:49 AM IST
Olympics 2024:பதக்க வேட்டைக்காக பாரிஸ் வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு – பிவி சிந்து உள்பட 49 வீரர்கள் வருகை

சுருக்கம்

பிவி சிந்து உள்பட 117 விளையாட்டு வீரர்களில் 49 விளையாட்டு வீரர்கள் பிரான்ஸ் தலைவர் பாரீஸ் வந்து சேர்ந்துள்ளனர்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் வரும் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் இடம் பெற்ற 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறன்றன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 10,714 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று 69 போட்டிகளில் 95 பதக்கங்களுக்காக போட்டி போடுகின்றனர்.

ஒலிம்பிக் வரலாற்றில் 28 பதக்கங்களை குவித்த நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் உடல் அமைப்பு பற்றிய அறிவியல் கூற்று

இதுவரையில் ஒலிம்பிக்கில் இந்தியா 35 பதக்கங்களை வென்று குவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உள்பட மொத்தமாக 7 பதக்கங்களை வென்றது. இந்த நிலையில் தான் தற்போது பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையானது 7ஐவிட அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த அபிஷேக் நாயர்? இந்திய அணியில் இணைந்த கேகேஆர் துணை பயிற்சியாளர்!

பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இடம் பெற்ற 117 விளையாட்டு வீரர்களில் வில்வித்தை (6) மற்றும் ரோவிங் (1) வீரர்கள் ஏற்கனவே பாரீஸ் சென்ற நிலையில் தற்போது அவர்களுடன் பிவி சிந்து உள்பட 49 விளையாட்டு வீரர்கள் பாரிஸ் வருகை தந்துள்ளனர். அவர்களில் ஹாக்கி அணி வீரர்கள் (19), டேபிள் டென்னிஸ் (8), துப்பாக்கி சுடுதலில் இடம் பெற்ற 21 வீர்ரகளில் 10 வீரர்கள், டென்னிஸ் (2), நீச்சல் (2), பேட்மிண்டன் (1) என்று மொத்தமாக 49 வீரர்கள் தற்போது பாரிஸ் வந்துள்ளனர்.

இலங்கை சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் – தலைமை பயிற்சியாளராக பணியை தொடங்கும் கவுதம் காம்பீர்!

 

 

 

 

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!