ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – ஒரே நாளில் 3 வெள்ளி பதக்கங்களை வென்ற இந்தியா!

Published : Dec 05, 2023, 12:38 PM IST
ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – ஒரே நாளில் 3 வெள்ளி பதக்கங்களை வென்ற இந்தியா!

சுருக்கம்

ஆர்மீனியாவின் யெரெவனில் நடந்த ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரே நாளில் இந்தியா 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.

ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. கடந்த மாதம் நவம்பர் 24 ஆம் தேதி முதல் ஆர்மீனியாவின் யெரெவனில் ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், 58 நாடுகளைச் சேர்ந்த 448 குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Chennai Floods: மிக்ஜம் புயல் பாதிப்பு - சென்னை மக்களுக்கு தைரியம் கொடுத்த ஹர்பஜன் சிங்!

இதில், நேற்று நடந்த மகளிருக்கான 54 கிலோ எடைப்பிரிவில் ஜார்க்கண்டைச் சேர்ந்த மணீஷா கெர்கெட்டா இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 80 கிலோ எடைப்பிரிவில் ஹர்திக் பன்வார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே போன்று மற்றொரு போட்டியில் 80 கிலோ பிரிவில் பிராச்சி டோகாஸ் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

இதையும் படிங்க;-  போர்க்கால அடிப்படையில் நிவாரணம்... 7 அமைச்சர்களுக்குக் கூடுதல் பொறுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதற்கிடையே ஸ்ருஷ்டி (63 கிலோ), நிஷா (52 கிலோ), சாஹல் (75 கிலோ), வினி (57 கிலோ), அகன்ஷா (70 கிலோ), மேகா (80 கிலோ), ஜதின் (54 கிலோ), ஹேமந்த் (80 கிலோ), பயல் (48 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா ஏற்கனவே 5 வெண்கலம் வென்றுள்ள நிலையில், மொத்தம் 17 பதக்கங்களை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பண்ணை வீட்டில் வளர்க்கும் குதிரைக்கு பாசமாக உணவு கொடுக்கும் தோனி – வைரலாகும் வீடியோ!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

கேரம் உலகக்கோப்பையின் தங்க மகள்..! சென்னை கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி அள்ளிக் கொடுத்த முதல்வர்!
நான் ஒன்றும் அவுட் ஆஃப் பார்ம் இல்லை.. ஜஸ்ட் ரன் அவுட் தான்.. மனம் தளராத சூர்யகுமார் யாதவ்