
விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அரிந்தர் சாந்து அசத்தலாக ஆடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் அரிந்தர் சாந்து தனது இரண்டாவது சுற்றில் கத்தாரின் சயீத் அஸ்லான் அம்ஜெத்துடன் மோதினார்.
இதில், 11-5, 11-7, 11-7 என்ற நேர் செட்களில் சயீத் அஸ்லான் அம்ஜெத்தை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் அரிந்தர்.
அரிந்தர் சாந்து தனது காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் ரைஸ் டெளலிங்கை எதிர்கொள்கிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற தெற்கு ஆஸ்திரேலிய ஓபன் இறுதி ஆட்டத்தில் இதே டெளலிங்கை வீழ்த்திதான் அரிந்தர் சாந்து சாம்பியன் பட்டம் வென்றார் என்பது கொசுறு தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.