மெஸ்ஸி அனுப்பிய ஜெர்ஸியை அணிந்து கொண்ட தோனி மகள்: வைரலாகும் புகைப்படம்!

Published : Dec 28, 2022, 01:19 PM IST
மெஸ்ஸி அனுப்பிய ஜெர்ஸியை அணிந்து கொண்ட தோனி மகள்: வைரலாகும் புகைப்படம்!

சுருக்கம்

எம் எஸ் தோனியின் மகள் ஜிவாவிற்கு அர்ஜெண்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி தனது ஜெர்ஸியை பரிசாக அளித்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடந்து முடிந்த ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜெண்டினா அணி ஃபெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று 36 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை தட்டிச் சென்றது. இதன் மூலம் லியோனல் மெஸ்ஸி கனவு நனவானது. இந்த நிலையில், கிரிக்கெட்ட் ஜாம்பவானான எம் எஸ் தோனியின் மகள் ஜிவாவிற்கு லியோனல் மெஸ்ஸி ஆச்சரியப்படும் வகையில் பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அர்ஜெண்டினா ஜெர்ஸியில் கையொப்பமிட்டு லியோனல் மெஸ்ஸி ஜிவாவிற்கு அனுப்பி உள்ளார்.

ஷிகர் தவான் சேப்டர் குளோஸா? இலங்கை தொடரில் நீக்கப்பட்டது ஏன்?

இந்த ஜெர்ஸியை அணிந்து ஜிவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தோனிக்கு கால்பந்து வீரராக வேண்டும் என்பது சிறு வயது ஆசை. அதிலேயும் கோல் கீப்பராக வேண்டும் என்று கனவு இருந்தது. ஆனால், கிரிக்கெட்டில் வலம் வந்தார். கிரிக்கெட்டிலும் அவர் கீப்பர் தான். தோனியைப் போன்று அவரது மகள் ஜிவா தோனி கால்பந்து ரசிகை. அவரது ஆர்வத்தை பாராட்டும் வகையில் மெஸ்ஸி ஜெர்ஸி அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஹர்திக் பாண்டியா கேப்டன், ரிஷப் பண்ட், ஷிகர் தவான் அணியில் இல்லை!

மெஸ்ஸி அனுப்பி வைத்த புகைப்படத்தை அணிந்து கொண்டு அப்பாவை போல மகளை போல கேப்ஷனுடன் ஜிவா பகிர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் இல்லை: டுவிட்டரில் கருத்து பதிவிட்ட ஹர்ஷா போக்ளே!

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?