கேலோ இந்திய குளிர்கால விளையாட்டு 2021: 2வது முறையாக தங்கம் வென்றார் ஆஞ்சல் தாகூர்

By karthikeyan VFirst Published Mar 2, 2021, 4:58 PM IST
Highlights

2வது கேலோ இந்திய குளிர்கால விளையாட்டு 2021ல் 2வது முறையாக தங்கம் வென்றார் பனிச்சறுக்கு வீராங்கனை ஆஞ்சல் தாகூர்.
 

2வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2021 கடந்த பிப்ரவரி 26ம் தேதி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விளையாட்டு தொடரை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

விளையாட்டுத்துறையில் ஜம்மு காஷ்மீருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த விளையாட்டு போட்டிகள் ஜம்மு காஷ்மீரில் நடந்துவருகிறது. இந்தியா முழுவதிலிருமிருந்து விளையாட்டு வீரர்கள் ஜம்மு காஷ்மீருக்கு வந்து கலந்துகொண்டனர்.

இதில் பனிச்சறுக்கு போட்டியில் வழக்கம்போலவே மிகச்சிறப்பாக விளையாடி 2வது முறையாக தங்கம் வென்றார் ஆஞ்சல் தாகூர். ஏற்கனவே ஒருமுறை தங்கம் வென்றுள்ள ஆஞ்சல் தாகூர், 2வது முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆஞ்சல் தாகூர் அண்மையில், இத்தாலியில் நடந்த உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

click me!