கிரிக்கெட்டில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் – வங்கதேசத்தை துரத்தி துரத்தி அடித்த ஜிம்பாப்வே!

Published : May 12, 2024, 01:50 PM IST
கிரிக்கெட்டில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் – வங்கதேசத்தை துரத்தி துரத்தி அடித்த ஜிம்பாப்வே!

சுருக்கம்

வங்கதேசத்திற்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியானது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஜூன் மாதம் தொடங்க இருக்கும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் வார்ம் அப் போட்டியாக டி20 தொடரில் இடம் பெற்று விளையாடி வருகின்றன. அதில், பாகிஸ்தான், அயர்லாந்து, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றன.

டி20 தொடரில் இடம் பெற்ற வங்கதேசம், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே அணியானது முதலில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இதையடுத்து 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது.

IPL Best Movements: மைதான ஊழியரை கையெடுத்து கும்பிட்ட ஜஸ்ப்ரித் பும்ரா!

இதில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் பிளெசிங் முசரபானி, பிரையன் பென்னட் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். வெலிங்டன் மசகட்சா, லூக் ஜாங்க்வே தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணியில் பிரையன் பென்னட் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 70 ரன்கள் குவித்தார்.

தடிவானாஷே மருமணி ஒரு ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சிக்கந்தர் ராஸா 46 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 72 ரன்கள் குவித்து ஆட்டழமிக்காமல் இருந்தார். கடைசியாக ஜொனாதன் காம்ப்பெல் 8 ரன்கள் எடுக்கவே ஜிம்பாப்வே 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஜிம்பாப்வே 1-4 என்று வென்றது.

ஃபார்மில் இல்லாத ரோகித், ஹர்திக் – MIக்கு ஆப்பு வச்சாச்சு, அப்புறம் டி20 உலகக் கோப்பையில் டீம் இந்தியாவா?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!