8 ஆண்டுகளாக ஆர்சிபியில் இருந்தேன்; ஒரு போன் கால் கூட இல்லை: யுஸ்வேந்திர சாஹல்!

Published : Jul 17, 2023, 03:27 PM IST
8 ஆண்டுகளாக ஆர்சிபியில் இருந்தேன்; ஒரு போன் கால் கூட இல்லை: யுஸ்வேந்திர சாஹல்!

சுருக்கம்

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த யுஸ்வேந்திர சாஹலை அணி நிர்வாகம் நீக்கியதைத் தொடர்ந்து இதுவரையில் ஒரு போன் கால் கூட செய்யவில்லை என்று யுஸ்வேந்திர சாஹல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தொடர்களில் மிக முக்கியமான தொடர் அது என்றால் அது ஐபிஎல் தொடர் தான். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பிசிசிஐ மூலமாக இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பிசிசிஐக்கு அதிக வருமானமும் கிடைக்கப் பெறுகிறது.

ரூ.100 கோடி மதிப்புள்ள மிக விலை உயர்ந்த பேட் ஸ்பான்சர்ஷிப் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

ஐபிஎல் தொடர்களில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள அணிகளில் விராட் கோலி இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான். இதுவரையில் 16 சீசன்கள் நடந்துள்ள நிலையில் ஒரு முறை கூட ஆர்சிபி டைட்டில் கைப்பற்றவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது.

அயர்லாந்து தொடருக்கு டிராவிட் உள்ளிட்ட பயிற்சியாளருக்கு ஓய்வு; களமிறங்கும் விவிஎஸ் லட்சுமணன்!

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு சாம்பியன் பட்டம் வாங்காத அணி என்றால், அது ஆர்சிபி தான். எனினும் கடைசியாக 2020 ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது.

டெஸ்ட் வரலாற்றில் சிறந்த சுழல் ஜோடி; 495 விக்கெட்டுகள் எடுத்து சாதித்த ரவிச்சந்திரன் அஸ்வின் – ரவீந்திர ஜடேஜா!

இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏலத்தில் ஆர்சிபி அவரை ஏலத்தில் எடுக்காதது குறித்து சாஹல் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இதுவரையில் ஆர்சிபி அணிக்காக 140 போட்டிகளில் விளையாடியுள்ளேன். பல போட்டிகளில் வெற்றி தேடிக் கொடுத்தேன். ஆனால், 2022 ஆம் ஆண்டு என்னை ஏமாற்றிவிட்டார்கள்.

ஆர்சிபி அணியில் 8 ஆண்டுகள் விளையாடியிருக்கிறேன். ஆனால், 2022 ஆம் ஆண்டு என்னை ஏலத்தில் எடுக்காமல் விட்டுவிட்டார்கள். ஆதலால் நான் கோபம் அடைந்தேன். பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியம் மிகவும் பிடித்தமான ஒன்று.

டெஸ்ட் வரலாற்றில் சிறந்த சுழல் ஜோடி; 495 விக்கெட்டுகள் எடுத்து சாதித்த ரவிச்சந்திரன் அஸ்வின் – ரவீந்திர ஜடேஜா!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்
Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..