Ireland vs India 3rd T20: டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுமா?

Published : Aug 23, 2023, 09:31 AM IST
Ireland vs India 3rd T20: டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுமா?

சுருக்கம்

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்துவிட்டு இந்திய அணி அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றது. இதில், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான், சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அயர்லாந்துக்கு சென்ற இந்திய அணிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். இதில், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்சி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவி பிஷ்னாய், முகேஷ் குமார், ஷாபாஸ் அகமது, ஜித்தேஷ் சர்மா, ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றனர்.

FIDE World Cup Final 2023: டிரா ஆன முதல் சுற்று இறுதிப் போட்டி: டிராபியை கைப்பற்றுவாரா பிரக்ஞானந்தா?

ஏற்கனவே நடந்து முடிந்த முதல் 2 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், முதல் 2 டி20 போட்டிகளில் இடம் பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஜித்தேஷ் சர்மா, ஷாபாஸ் அகமது, ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

நிலவில் தரையிறங்கும் சந்திரயான் – 3; வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா?

அயர்லாந்து டி20 தொடர் முடிந்த நிலையில், ஒரு வாரத்திற்குள்ளாக இந்தியா ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கிறது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக இடம் பெற்றிருக்கிறார்.

இரண்டு போட்டிகள் கொண்ட செஸ் இறுதிப் போட்டி தொடங்கியது – பிரக்ஞானந்தா vs மேக்னஸ் கார்ல்சன் பலப்பரீட்சை!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!