லக்னோவை வீழ்த்தி 2ஆவது இடம் பிடிக்குமா மும்பை? சென்னையின் நிலைமை?

Published : May 16, 2023, 02:47 PM IST
லக்னோவை வீழ்த்தி 2ஆவது இடம் பிடிக்குமா மும்பை? சென்னையின் நிலைமை?

சுருக்கம்

லக்னோவிற்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடிக்கும்.

லக்னோ ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 63ஆவது ஐபிஎல் போட்டி நடக்கிறது. இதில், 12 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது. லக்னோ 12 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 13 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 2 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தான் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த 2 போட்டிகளுமே கடந்த சீசனில் நடந்ததுதான். இதில், 2 முறையும் கேஎல் ராகுல் 2 சதம் அடித்திருக்கிறார்.

முகமது சிராஜ்ஜின் புதிய வீடு திறப்பு விழாவிற்கு விசிட் அடித்த விராட் கோலி அண்ட் டீம்!

ஏகானா மைதானத்தில் இதுவரையில் நடந்த 6 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. மற்ற 3 போட்டிகளில் எதிரணி வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், ஒரு போட்டி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் அதிகபட்சமாக லக்னோ 193 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்மாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

சச்சின் சாதனையை முறியடித்த கில்; நேற்றைய போட்டியின் சாதனைகள் லிஸ்ட் இதோ

புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் 2ஆவது இடம் பிடிக்கும். தற்போது 2ஆவது இடத்திலுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ஆவது இடத்திற்கு தள்ளப்படும். இதன் மூலமாக மும்பையின் பிளே ஆஃப் கனவு நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு போட்டியில் விளையாட உள்ள சிஎஸ்கே அந்தப் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து, 2ஆவது அணியாக வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!