Virat Kohli: பயிற்சியின் போது கட்டித் தழுவி அன்பு பாராட்டிய விராட் கோலி – ஹரீஷ் ராஃப்: வைரலாகும் வீடியோ!

Published : Sep 01, 2023, 10:59 PM IST
Virat Kohli: பயிற்சியின் போது கட்டித் தழுவி அன்பு பாராட்டிய விராட் கோலி – ஹரீஷ் ராஃப்: வைரலாகும் வீடியோ!

சுருக்கம்

நாளை நடக்க உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி மற்றும் ஹரீஷ் ராஃப் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி அன்பு பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 30 ஆம் தேதி ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 2ஆவது லீக் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அதிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டி நாளை பிற்பகல் 3 மணிக்கு இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இலங்கை சென்று அங்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

India vs Pakistan: பாகிஸ்தானை தோற்கடிக்க இதை செய்தால் போதும்: முன்னாள் பாக், வீரர் வஹாப் ரியாஸ்!

பயிற்சியின் போது விராட் கோலியும், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹரீஷ் ராஃப் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து கட்டியணைத்து அன்பு பாராட்டியுள்ளனர். ஷதாப் கான், ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் உள்பட பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை விராட் கோலி சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று ரோகித் சர்மா மற்றும் பாபர் அசாம், முகமது சிராஜ் மற்றும் ஹரீஷ் ராஃப் ஆகியோரும் சந்தித்து பேசியுள்ளனர். இது தவிர்த்து, செய்தியாளர் சந்திப்பின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம், எனக்கு விராட் கோலி நிறைய உதவியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது நான் அவருடன் பேசினேன். அவர் உதவியாக இருந்தார். எங்களுக்கிடையில் பரஸ்பர மரியாதை நிறைய இருக்கிறது என்று கூறியுள்ளார்.

India vs Pakistan: சஞ்சு சாம்சனால் விளையாட முடியாது: கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!