டி20 உலக கோப்பை: அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Nov 9, 2022, 8:25 PM IST
Highlights

டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. சிட்னியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

அடிலெய்டில் நாளை(நவம்பர் 10) நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

T20 WC: ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரில் அரையிறுதியில் ஆடப்போகும் விக்கெட் கீப்பர் யார்? ரோஹித் பதில்

அரையிறுதியில், விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவரில் யார் ஆடுவார், சாஹலுக்கு ஆட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விகள் உள்ளன. சூப்பர் 12 சுற்றில் ஒரு போட்டியில் கூட ஆடாத யுஸ்வேந்திர சாஹலுக்கு நேரடியாக அரையிறுதி போட்டியில் ஆட வாய்ப்பு வழங்கப்படமாட்டாது. 

இங்கிலாந்து அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் கணிசமாக இருப்பதால் அஷ்வின் கண்டிப்பாக ஆடுவார். அக்ஸர் படேல் பேட்டிங்  ஆடுவார் என்பதால் பேட்டிங் டெப்த்தை கருத்தில்கொண்டு அவரும் கண்டிப்பாக ஆடுவார்.

அடுத்தது விக்கெட் கீப்பர். இந்த உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக் தான் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக ஆடினார். சூப்பர் 12 சுற்றின் முதல் 4 போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் தான் ஆடினார். பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்காமல் படுமோசமாக சொதப்பிய தினேஷ் கார்த்திக்கின் விக்கெட் கீப்பிங்கும் சராசரிதான். 

தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக இந்திய அணி விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டைத்தான் ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் கருத்து கூறினர். அதற்கேற்ப தினேஷ் கார்த்திக்கும் சொதப்ப, ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு ஆட வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே அரையிறுதி போட்டியில் யார் ஆடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அரையிறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆட வாய்ப்பில்லை. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவை. எனவே விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் ஆடுவார். இந்திய அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.

ஐபிஎல் 2023: கொச்சியில் ஐபிஎல் ஏலம்..! கூடுதல் தொகையால் குதூகலத்தில் ஐபிஎல் அணிகள்

அரையிறுதி போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
 

click me!