நியூசிலாந்திற்கு எதிராக டீம் இந்தியா இந்த தவறை மட்டும் செய்யாமல் இருந்தால் வெற்றி பெற வாய்ப்பு!

Published : Nov 15, 2023, 11:09 AM IST
நியூசிலாந்திற்கு எதிராக டீம் இந்தியா இந்த தவறை மட்டும் செய்யாமல் இருந்தால் வெற்றி பெற வாய்ப்பு!

சுருக்கம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பீல்டிங்கிலும், கேட்சிலும் கோட்டைவிட்டனர்.

இந்தியாவில் நடந்து வந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்னும் 3 போட்டிகளுடன் முடிகிறது. உலகக் கோப்பை கிர்க்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணியானது மீண்டும் இது போன்ற தவறுகளை செய்யாமல் இருந்தால் வெற்றி பெறலாம்.

தப்பி தவறி எனது வாயில் வந்துவிட்டது, எந்த உள்நோக்கமும் இல்லை; ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட அப்துல் ரசாக்!

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 21 ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 273 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் டேரில் மிட்செல் 130 ரன்கள் குவித்தார். அவர் 60 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கோட்டைவிட்டார். மேலும், டேரில் மிட்செலுக்கு பும்ராவும் ஒரு கேட்சை கோட்டைவிட்டார்.

India vs New Zealand:இது ரிவெஞ்சுக்கான காரணம் – 2019 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்கு இந்தியா பழி தீர்க்குமா?

இதே போன்று, முகமது ஷமி வீசிய ஓவரில் ரச்சின் ரவீந்திரா கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரவீந்திரா ஜடேஜா கோட்டைவிட்டார். பீல்டிங்கும் கொஞ்சம் மந்தமாகவே இருந்தது. இதையெல்லாம் இன்று நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி செய்யாமல் இருந்தால் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

நெதர்லாந்து கூட 410 அடிப்பது முக்கியமல்ல, நியூசிலாந்து கூட அடிக்கணும் அதுதான் முக்கியம் – ரசிகர்கள் குமுறல்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உடல்நலக்குறைவு, SMAT போட்டிக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதி
சூர்யகுமார், கில்லுக்கு வாழ்வா சாவா போட்டி; தொடரைக் கைப்பற்றுமா இந்தியா..?