சச்சின் 50 நாட் அவுட் - சச்சின் பெயரை சூட்டி கௌரவித்த சிட்னி கிரிக்கெட் மைதானம்!

Published : Apr 24, 2023, 04:09 PM IST
சச்சின் 50 நாட் அவுட் - சச்சின் பெயரை சூட்டி கௌரவித்த சிட்னி கிரிக்கெட் மைதானம்!

சுருக்கம்

சச்சின் டெண்டுல்கரின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் கேட்டிற்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது கோவாவில் உள்ள சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் டீ டைம்; 50 நாட் அவுட் என்று பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

IPL 2023: அஸ்வின் அவுட்டானதைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுத அவரது மகள்!

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானம் சச்சின் டெண்டுல்கரின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் கேட்டிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா - சச்சின் டெண்டுல்கரின் பெயரை சூட்டி அவர்களை கௌரவித்துள்ளது. இந்த கேட்டை கடந்து தான் மைதானத்திற்குள் விசிட்டிங் அணியின் வீரர்கள் உள்ளே செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபனா சொல்லாமல், நாசுக்காக சொன்ன எம்.எஸ்.தோனி; எப்படியாவது டிராபியை கைப்பற்ற போராடும் சிஎஸ்கே!

கடந்த 1993 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிரையன் லாரா தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். சச்சின் விளையாடிய 200 போட்டிகளில் 5 போட்டிகள் சிட்னி மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். சிட்னி மைதானத்தில் அதிகபட்சமாக 241 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்துள்ளார். இதே போன்று லாராவும் சிட்னியில் 4 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிகபட்சமாக 277 ரன்கள் குவித்துள்ளார்.

சச்சினின் 200ஆவது டெஸ்ட்: தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்திய இந்திய அஞ்சல் துறை!

 

கிரிக்கெட்டின் கடவுள், சாதனை நாயகன் சச்சினின் 50ஆவது பிறந்தநாள் இன்று!

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!